டைரக்டர் மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு ?


முகமூடி படத்தில் சறுக்கியதால் பெரும் ஏமாற்றத்திற்குள்ளான மிஷ்கின், தன் திறமையை நிரூபத்தே ஆகவேண்டும் என்ற இக்கட்டான நிலையில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை வெளியிட்டு வெற்றியும் பெற்றுவிட்டார். தற்போது அந்த வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் முழு முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதாவது தனது அடுத்த படத்திற்கான வேலையை மும்முரமாக தொடங்கிவிட்டார்.
முந்தைய படத்தை போலவே விறுவிறுப்பான திகில் படம் ஒன்றிற்கு ஸ்கிரிப்ட் எழுதி முடித்துவிட்டார். இந்த படத்தில் ஹீரோவாக யாரை நடிக்க வைப்பதுதான் என்றுதான் குழப்பம் நிலவுகிறது. இவருடைய கதையை கேள்விப்பட்டு கார்த்திக் கெளதம் இவரை சந்தித்து, இந்த கதையில் தான் நடிக்க விரும்புவதாகவும், தனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும்படியும் நேரடியாகவே கேட்டுவிட்டார். ஆனால் மிஷ்கின் இந்த கதையை எழுதும்போதே சிம்புவை வைத்துதான் எழுதியதாகவும், சிம்பு நடிக்காவிட்டால் அடுத்த சாய்ஸ் உனக்குத்தான் என்றும் கூறி அனுப்பிவிட்டார்.
சிம்பு தற்போது வாலு, வேட்டை மன்னன், கௌதம் இயக்கத்தில் மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால் மிஷ்கினின் புதிய நடிப்பாரா? என்பது சந்தேகம்தான் என்கிறது கோலிவுட் வட்டாரம். ஆனாலும் மிஷ்கின் மிகக்குறுகிய காலத்தில் படத்தை முடித்துவிடுவார் என்பதால் சிம்பு நடிக்க சம்மதிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது