ஐந்து லட்சத்தில் கவிஞர் வாலிக்கு பிளாட்டினம் சி.டி!


ஒஸ்தி குத்துப் பாடல் மூன்று லட்சம் டவுண்லோட்! ஐந்து லட்சத்தில் கவிஞர் வாலிக்கு பிளாட்டினம் சி.டி! சிம்பு, ரிச்சா நடித்து வெளிவரும் படம் ஒஸ்தி இன்னும் சில நாட்களில் ரீலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தை தரணி இயக்கி இருக்கிறார். இப்படம் இந்தியில் வரவேற்பை பெற்ற தபாங் படத்தின் ரீமேக்காகும். படத்துக்கு தமன் இசையமைத்துள்ளர். ஓஸ்தி படத்தில் மல்லிகா ஷெராவத்துடன், சிம்பு ஆட்டம் போட்ட குத்தாட்ட பாடல் தான் படத்தில் பெரிதாக பேசப்படும் என்று படக்குழு வட்டாரத்தில் சொல்லி வருகிறார்கள். தபாங் படத்தில் இடம்பெற்ற ’முன்னி’ என்கிற குத்துப் பாடலுக்கு மாற்றாக தமிழில் அந்தப்பாடல் எப்படி வரப்போகிறது என்று பயந்த இயக்குனர் தரணி, இந்தப் பாடலுக்கு தற்போது கிடைத்துள்ள வரவேற்பைப் பார்த்து மிரண்டுபோயுள்ளாராம். அந்தப் பாடலை தமிழில் எழுதியவர் வாலிபக் கவிஞர் வாலி. ‘கலாசலா’ என்று தொடங்கும் இப்பாடலை டி.ராஜேந்தருடன் இணைந்து பழம்பெரும் பாடகியான எல்.ஆர்..ஈஸ்வரி பாடி இருக்கிறார். “வடக்கே என்னைப் பத்தி கேட்டுப்பாரு… ஜர்தா பீடா போட்டது போலிருக்கும்…. மல்லிகாவை நீ கடிச்சா நெல்லிக்கா போல் இனிப்பா.. மல்லிகா மை டார்லிங் கூப்பிடறா…” என்று எல்.ஆர்.ஈஸ்வரி போதையூட்டும் குரலில் பாடியுள்ளார். இந்த பாடல் தான் தற்போது அதிக அளவு ரிங்டோன் பாடலாக டவுன்லோடு செய்யப்படுள்ளது. மிக குறைந்த காலத்தில், மூன்று லட்சத்துக்கும் மேலாக ரிங்டோன்டவுன்லோடு செய்திருப்பதால், சோனி நிறுவனம் டவுண்லோடில் மட்டுமே லாபத்தை குவித்திருகிறதாம். இதனால், வாலியை கெளரவிக்க, சோனி நிறுவனம் முடிவு செய்து, விலையுயர்ந்த உலோகமான பிளாட்டினத்தால் செய்யப்பட்ட சிடியை தயாரித்து வழங்கி கௌரவபடுத்த இருக்கிறதாம்! இந்த சிடியின் விலை ஐந்து லட்சம் என்கிறார்கள் சோனி தரப்பில்!