வேட்டை மன்னன் அடுத்த வருடம் வெளியீடு: சிம்பு

விண்ணை தாண்டி வருவாயா பட வெற்றிக்கு பிறகு நான்கு படங்களில் நடிக்க பிஸியானார் எஸ் டி ஆர் என்கிற சிம்பு.“வானம்” படம் நன்றாக வந்துள்ளது. விரைவில் இப்படம் வெளியிட உள்ளது. அடுத்து “போடா போடீ” படத்தில் கவனம் செலுத்தப்போகிறேன். தபங் படத்தின் ரீமேக், வேட்டை மன்னன் படங்களிலும் நடிக்கிறேன். வேட்டை மன்னன் படத்தில் நாயகனாக நடிக்கிறேன். என்னுடன் ஜெய்,சந்தானம் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது.ஏழு கொமராக்கள், அறுபது ஸ்டண்ட் கலைஞர்கள் உடன் ஆக்ஸன் காட்சிகளை பின்னி மில்லில் படமாக்க போறோம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டுமின்றி இந்தியில் வெளியாக உள்ளது. பாலிவுட்டிலும் இந்த சிம்புவின் கொடி பறக்க போவுது பாருங்க.வேட்டை மன்னன் படம் “கேங்க்ஸ்டர்” ஆக்சன் கதை. நாற்பது கோடியை படத்தின் பட்ஜெட் தாண்டும் என்று எதிர்பார்க்கபடுகிறது. எனக்கு மூன்று ஹீரோயின். பாலிவுட்டின் பிரபல ஹீரோயின் என்னுடன் நடிக்கிறார்.ஆக்ஸன் காட்சிகளில் ஹாலிவுட்டின் ஸ்டண்ட் கலைஞர்கள் பணியாற்ற போகிறார்கள். சென்னை, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனேகமாக அடுத்த வருடம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.“போடா போடீ” படத்தின் கதையை டைரகடர் நெல்சன் சொன்னதும் எனக்கு பிடித்து போனது. லண்டனில் படப்பிடிப்பு போகிறது.இந்த படத்தில் கொமெடியும் ஆக்சனும் துள்ளுது. நிச்சயம் இந்த படம் மாஸ் எண்டர்டெயினராக இருக்கும். படத்தை எஸ்.எஸ். சக்ரவர்த்தி தயாரிக்கிறார் என்கிறார் “யங் சூப்பர் ஸ்டார்” எஸ்டிஆர்.